வாழுமுன்னே வரலாறு படைத்தவரே
வரலாற்றை இருகூராய் பிரித்தவரே
வராலாறாய்ப் போனவரே , எங்களுக்கு
வரமருள வேண்டுமென இறைஞ்சுகின்றோம்.
இன்னுமொரு வருடமதை எங்களுக்குத் தந்தவரே
புன்னகைக்கும் குழந்தை யேசுவே புனித ஆவியானவரே
கன்னிமரி அன்னையரே சூசையெனும் மாமுனியே
புத்தாண்டின் வாழ்த்துக்களை பூரிப்புடன் வழங்குகின்றோம்.
பங்கு பணியேற்றிருக்கும் பாசமுள்ள தந்தையரே
ஓங்கு புகழ் கல்விக்கூட உயரிய நல் தலைவரே
விருந்தினராய் எழுந்தருளும் வித்தகரே, சற்குருவே
கருணை மிகும் கன்னியரே கரங்குத்தோம் எம் வணக்கம்.
சங்கைமிகும் நற்குருவே சாத்வீக மானவரே
உங்களது கட்டளையை உவகையுடன் செய்துவரும்
எங்கள் வீட்டு இளைஞர்களும் ஏற்றமிகு இளைஞிகளும்
பங்கமுறா வாழ்வு பெற பரமனருள் வேண்டிடுவீர்.
ஞாலக்கல்வி புகட்டுகின்ற சிரமமொடு நில்லாமல்
ஞானக்கல்வி பயிற்றுகின்ற நற்சேவை புரிகின்றீர்
பாலகனாம் யேசுபிரான் பதம்நாடிப் பணிகின்றீர்
கோலஞ்செய் குழந்தையேசு குணம் தேடிப்பரவுகின்றீர்.
மறை பரப்பும் பேரவையும் மரியாயின் சேனைகளும்
உருமாறிப் போகாமல் உரம்போட்டு வளர்த்திடுவீர்
விரைவாக செயல்படுத்த வேண்டியன செய்திடுவீர்
திறம்படவே நடந்திடவே இறையருளை இறைஞ்சிடுவீர்.
அன்பியங்கள் அத்தனையும் ஆர்வமுடன் செயலாற்றி
பண்பட்ட குடும்பமாக பக்தியுள்ள கூட்டமாக
என்றென்றும் நிலைத்து நிற்க ஏற்றதொரு வழியைக்காட்டி
குன்றெனவே நிமிர்ந்து நிற்கும் நன்றென நடத்திச் செல்வீர்.
செயல்புரியும் பேரவையை செப்பனிட்டு வடிவமைத்து
தூய்மையான சங்கமென துலங்கிடவே அனுதினமும்
பங்கு பணியாற்றுகின்ற பாங்கினை கற்றுத் தந்த
சங்கைமிகும் எம்குருவை போற்றிப் பாராட்டுகின்றோம் .
காலையிலும் மாலையிலும் கானமழை பொழிவதற்கு
பாலு பாபுவின் பார்வையிலே பண்பட்ட இசைக்குழுவை
அழகுற அமைத்துக்காட்டி ஆரவாரம் ஏதுமின்றி
ஆலயத்தில் பாடுகின்ற ஆற்றலைத்தான் போற்றுகின்றோம்.
அந்தோனியார் பக்திதனை அனைவரும் கொண்டாடிடவே
முந்திய நாட்களிலே முழுதும் மறந்திருந்தோம்
அந்தப் பழக்கத்தை ஆர்வமுடன் கொண்டுவந்து
மங்கா புகழ்படைத்த மார்க்கோணியாரே வாழ்க வாழ்கவே .
அலங்காரம் செய்வதிலே ஆர்வமதைக் காட்டுகின்றீர்
ஜோடனைகள் செய்யும்போது சோறு தண்ணீர் மறந்திடுவீர்
கோயில்வேலை செய்துசெய்து வானில்சொத்து சேர்த்திடுவீர்
காசில்லாமல் பணிகலாற்றும் மாசில்லாமணியே வாழ்க வாழ்கவே.
தேவைகளை கண்டறிந்து செய்திடுவீர் மனமகிழ்ந்து
சேவை மனங்கொண்டோரை செர்த்தொன்றாய் கூட்டிடுவீர்
புவிதனிலே யாவரும் புகழ் பரப்பி வாழ்ந்திடவே
வரமருளும் வள்ளலையாம் வணங்குகின்றோம் வாழ்த்துகின்றோம்.
நடையிலே தள்ளாட்டம் நாவிலே தடுமாற்றம்
இடையிலே வந்தெனக்கு இடையூறு செய்தாலும்
கடவுளின் துணையோடு கவிதனைப் புனைந்து
பாடுகின்றேன் இல்லை இல்லை படிக்கின்றேன்
உங்கள் முன் படைக்கின்றேன்
பார்ப்போரே , ஏற்ப்பீரே !
உற்றாரே ஊராரே உங்களுக்கும் எம்வணக்கம்
கற்றோரே மற்றோரே களங்கமில்லா சோதரரே
பெற்றோரே பெரியோரே பேரவையின் உறுப்பினரே
வற்றாத நதிபோல வளம் பெற்று உயர்ந்திடுவீர் !
அனைவருக்கும் பீட்டர் தாத்தாவின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
குபீர்
(குமாரமங்கலம் பீட்டர்)