பாமாலை
புனித கார்மேல் அன்னையின் ஆலயத் திறப்பு விழா
குன்னமலை
நாள் : 18-07-2015
அருங்குணக்குன்று நீ ஆசைக்கற்கண்டு நீ
பெருங்குணங்கொண்டு நல் பேருபகாரி நீ
கார்மேலின் அன்னை நீ கலங்கரை தீபம் நீ
வரமருள் வள்ளல் நீ அறம் பொருள் இன்பம் நீ
அரும்பெரும் குணசீலர்
ஆயர் பெருந்தகையே
பெரும்பங்கு வகிக்கின்ற
பிரகாசம் அடிகளாரே
மாவட்ட மறைவட்ட தலைவரேறே
அருட்பணி தந்தையரே
பெருந்திரளாய் குழுமியுள்ள
விருந்தினரே எம் வணக்கம்
ஆண்டகையின் அடிச்சுவடு
பங்கு எங்கும் பதிந்தது
தூண்டுதலாய் இருந்தது - எம்
துயரமெல்லாம் பறந்தது
மீண்டும் ஒரு நற்குருவால்
கோயிலொன்று அமைந்தது
வேண்டும் வேண்டுமே நல்
வினைகள் பெருக வேண்டுமே
ஆலயத்தை கட்டுதற்கு
ஆண்டகையும் எண்ணினார்
அருட்தந்தை பிரகாசம்
அதை நினைத்து துள்ளினார்
எங்கள் குரு பிரகாசம்
பங்கு பணி ஆற்றினார்
அங்குமிங்கும் ஓடியாடி
ஓங்குபுகழ் ஈட்டினார்
சமைப்பதற்கு ஆளில்லை
சங்கடங்கள் பலகண்டார்
இமைப்பொழுதும் சோர்வின்றி
இறைபணியை மேற்கொண்டார்
ஆயர் சிங்கராயராலே
ஆலயம் உருவானது
அருட்பணி பிரகாசத்தால்
ஆலயம் இறுதியானது
பழமையான கோவிலொன்று
பொலிவிழந்து நின்றது
அழகாக உருமாறி
எழிலோடு விளங்குது
குன்னமலை என்னும் ஒரு
சின்னஞ்சிறு ஊருங்க
அன்னைமரி ஆலயத்தை
நின்னு கொஞ்சம் பாருங்க
வண்ணமிகு ஆலயத்தை
கண் குளிர காணுகின்ற
விண்ணக வேந்தர் இயேசு
புன்னகை பூத்திடுவார்
ஓரிடத்தில் நின்று கொண்டே
ஊரை எண்ணிப் பார்க்கலாம்
பாறை மேலே அமர்ந்துகொண்டே
பேரைச் சொல்லி அழைக்கலாம்
மணியின் ஓசை கேட்கும் போது
புனிதை நினைவும் வருகுது
மக்கள் ஒன்றாய் கூடியே
ஆலயம் நோக்கி விரைகுது
சென்னையிலே ஒரு சின்னமலை
குன்னமலையிலும் ஒரு சின்னமலை
எங்கே அந்த சின்னமலை ?
குன்னமலை தான் அந்த சின்னமலை
சத்திய திருச்சபைக்கும்
உத்தம கிறிஸ்துவர்க்கும்
பத்தரை மாற்றுத்தங்கமென
உத்தரியத் தாய் விளங்குகிறாள்
ஆரோக்கியத் தாயே என்றும்
அடைக்கலம் நீயே என்றும்
பாரெல்லாம் போற்றுதம்மா
காரிருளும் விலகுதம்மா
கார்கால கோடை மழை
பார் மீது விழுவதைப் போல்
கார்மேல் அன்னயின் ஆசீரும்
ஊரெல்லாம் பரவிப் பொழியுதம்மா
உத்தரிய மாதாதான்
ஊரை என்றும் காப்பவர்
அரிய மாதா பதம் பணிந்து
அனைவரும் வாழ்ந்து காட்டுவோம் .
ஆக்கியோன்
அய் . பீட்டர்
முன்னாள் ஆசிரியர்
(பணி :1950 - 1952)
குன்னமலை , பரமத்தி தாலுகா
நாமக்கல் மாவட்டம்