மறைந்த தன் நண்பர்/ உறவினர் ஒருவருக்காக ,தாத்தா எழுதிய இரங்கல் பா ..
தங்க மனம் படைத்த புகழ் மாணிக்கமே
எங்கு சென்றாய் எமை விட்டு எம் தலைவா
இங்கிருந்தால் ஓய்வு ஏது எனக் கருதி
அங்கு சென்று ஓய்வெடுக்க போயினயோ ?
மனிதர் கூட புனிதராகி தெய்வம் போல
இனிமையில் திளைத்திடலாம் சொர்க்கம் ஏகி
தனிமையில் இனிமை காண தவசி போல
துணிவோடு ஏகிவிட்டாய் எமை மறந்தாய் .
அப்பப்பா உனை மறந்து இருப்பதற்கு
எப்படித்தான் மனது வரும் எங்களுக்கு
ஒப்பில்லா மாமணியே உம் புகழை
எப்போதும் காத்திடுவோம் உறுதி கொள்வோம்.
தங்க மனம் படைத்த புகழ் மாணிக்கமே
எங்கு சென்றாய் எமை விட்டு எம் தலைவா
இங்கிருந்தால் ஓய்வு ஏது எனக் கருதி
அங்கு சென்று ஓய்வெடுக்க போயினயோ ?
மனிதர் கூட புனிதராகி தெய்வம் போல
இனிமையில் திளைத்திடலாம் சொர்க்கம் ஏகி
தனிமையில் இனிமை காண தவசி போல
துணிவோடு ஏகிவிட்டாய் எமை மறந்தாய் .
அப்பப்பா உனை மறந்து இருப்பதற்கு
எப்படித்தான் மனது வரும் எங்களுக்கு
ஒப்பில்லா மாமணியே உம் புகழை
எப்போதும் காத்திடுவோம் உறுதி கொள்வோம்.
குபீர் (குமாரமங்கலம் பீட்டர்)
No comments:
Post a Comment