Creative Commons License
பீட்டர் தாத்தா பக்கங்கள் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Sunday, January 11, 2015

இரங்கல் பா

மறைந்த தன்  நண்பர்/ உறவினர் ஒருவருக்காக ,தாத்தா எழுதிய இரங்கல் பா ..




தங்க மனம் படைத்த புகழ் மாணிக்கமே 
எங்கு சென்றாய் எமை விட்டு எம் தலைவா 
இங்கிருந்தால் ஓய்வு ஏது எனக் கருதி 
அங்கு சென்று ஓய்வெடுக்க போயினயோ ?


மனிதர் கூட புனிதராகி தெய்வம் போல 
இனிமையில் திளைத்திடலாம் சொர்க்கம் ஏகி 
தனிமையில் இனிமை காண தவசி போல 
துணிவோடு ஏகிவிட்டாய் எமை மறந்தாய் .


அப்பப்பா உனை மறந்து இருப்பதற்கு 
எப்படித்தான் மனது வரும் எங்களுக்கு 
ஒப்பில்லா மாமணியே  உம் புகழை 
எப்போதும் காத்திடுவோம் உறுதி கொள்வோம்.


                                                                                                                            குபீர்                                                                                 (குமாரமங்கலம் பீட்டர்)

No comments:

Post a Comment